முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு குண்டல்பட்டி பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
தருமபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி குண்டலபட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி. பானு பூமணி தலைமையில் இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகள் பயன் பெறும்வகையில் எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள்,எஸ்எம்சி தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள்,பள்ளியின் மாணவ செல்வங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

