தருமபுரி சனத்குமார்நதி தூர்வாரும் பணி ஆட்சியர் ரெ. சதீஷ் நேரில் ஆய்வு
தருமபுரி நகராட்சி அன்னசாகரம் செல்லும் வழியில் சனத்குமார் நதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், ஆணைப்படி சனத்குமார் நதியை தூர்வாரி தூம்மை படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் செல்லும் வழியில் உள்ள சனத்குமார் நதி தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

மேலும் வரலாற்று சிறப்பு மிக்க சனத்குமார் நதியை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என்றும், பொதுமக்கள் இந்த நதி ஓடும் பகுதிகளில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றும் சனத்குமார் நதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகரமன்ற தலைவர் மா.லட்சுமி நாட்டான் மாது, நகரமன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சேகர், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணன், ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

