தருமபுரி வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா 2024ஐ மதசார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி. பி.மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ. நசர்அகமது,எஸ்.ஏ.இர்பான்பாஷா,பைரோஸ்,மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் ஏ. நியாஸ், மாவட்ட பொருளாளர் எம். இதயதுல்லா மாநில செயற்குழு உறுப்பினர் எம். இலியாஸ், மாவட்ட துணைத்தலைவர் ஷாஜகான் மாவட்ட துணை செயலாளர்கள் என். முகமது சலீம், பி. அஸ்லம் எம். நசீப்ஜான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணை செயலாளர்கள் இ. ஷப்பீர், என். கலீல், பி. முகமதுரஃபி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணை செயலாளர் உ. முஹம்மது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார் மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பொ. மு. நந்தன், திராவிடர் கழக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் செல்லதுரை,இந்திய முஸ்லிம் யூனியன்லீக் மாவட்ட தலைவர் எஸ். அனவர்பாஷா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர தலைவர் ஏ. சாதிக் நன்றி கூறினார்.
.

