கீரிப்பிள்ளையை வலைவைத்துபிடித்த இருவர் கைது
தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை வனசரகத்திற்குபட்ட வேப்பம்பட்டி காப்புக்காடு அருகில் உள்ள வேப்பம்பட்டி கிராமம், விநாயகா ரைஸ்மீல் அருகில் வன உயிரினமான கீரிப்பிள்ளையை கட்டுவலை வைத்து பிடித்த அரூர் பச்சனாம்ப்ட்டி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (37) ஆகிய இருவரையும் தருமபுரி வனப்பாதுகாப்புபடையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த வன உயிரினமான கீரிப்பிள்ளை 1972 வன உயிரின சட்டம்அட்டவணை-1 ல்,வகைப்படுத்தப்பட்டபகுதிஏ-ல் கொண்டுவரப்பட்டுள்ளது. பிடிபட்ட எதிரிகள் இருவரையும் பிப்-26.ம் தேதி அரூர் குற்றவியல் நடுவர், முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரின் உத்திரவுப்படி அரூர் கிளைச்சிறையில் மெய்க்காவலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடுவர், அரூர் அவர்களின் உத்திரவுப்படி கீரிப்பிள்ளையை தீர்த்தமலை வனச்சரகம், தீர்த்தமலை காப்புக்காட்டில் நல்ல நிலையில் விடப்பட்டது.

