தருமபுரி மாவட்ட நிலப்பரப்பு, நீர்நிலை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு
தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டத்தில் 2025ஆம் ஆண்டில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 08-03-2025 மற்றும் 09-03-2025 ஆகிய இருதினங்களில் சதுப்பு நில (Wetland) பறவைகள் கணக்கெடுப்பும். 15-03-2025 மற்றும் 16-03-2025 ஆகிய இருதினங்களில் நில (Terrestrial) பறவைகளின் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடைபெற உள்ள பறவைகள் கணகெடுப்பில் பங்குபெறுவதற்கு பறவைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களும், பறவைகளை அடையாளம் காணத்தெரிந்தவர்களும், (தன்னார்வலர்கள்/அரசு சாரா தொண்டு நிறுவனத்தினர்கள் /பள்ளி/கல்லூரி LDIT6001 623/மாணவியர்கள்) 06-03-2025 அன்று மாலை 5.30 மணிக்குள் தருமபுரி, மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலை பேசி எண். 04342-230003 இல் தொடர்பு கொண்டு தங்களின் பங்களிப்பு குறித்து பெயர், தொலைபேசி எண் மற்றும் ஊர் போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என மாவட்ட வன அலுவலர் கா. இராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

