முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் ஒருங்கிணைந்த ஒன்றிய பாசறை இளைஞர் அணி செயலாளர் சரவணன் அவர்கள் தலைமையில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படம் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பட்டாசு வெடித்தும் ,பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோர் 1000 நபர்களுக்கு வேட்டி சேலைகளை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவிதாசரவணன், அவர்கள் ஏற்பாட்டில் கே.பி அன்பழகன் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புதிய அஇஅதிமுக கட்சி அலுவலகத்தை கே.பி அன்பழகன் திறந்துவைத்தார்,இந்நிகழ்ச்சியில் மாரியகவுண்டர், கிருஷ்ணன், முனுசாமி, திம்மராயன், சுந்தரேசன், ஐடியா மணி,சேகர், ராமச்சந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

