புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியு ) மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தருமபுரியில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சி.முருகன் மின்வாரிய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவராமன், போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.முருகன்,கட்டுமான தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கோபி,அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பேசினர்.
தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும் தொழிலாளர் சமூக பாதுகாப்பு,கௌரவம் மற்றும் சமத்துவத்துத்தை உறுதிப்படுத்தவும்,
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய குற்றவியல் சட்டங்களை நீக்குவதற்க்கும் தனியார்மயத்தை தடுத்து நிறுத்துவதற்காககவும்,

தொழிலாளர்களுக்கு கௌரவமான வேலை. ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரவும், கோவை பிரிக்கால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் களமாடி ஆயுள் தண்டனைக் கைதிகளை 10 ஆண்டுகளாக சிறைப்பட்டுள்ள தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி விடுதலைக்காகவும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஏஐசிசிடியு வின் 11-வது அகில இந்திய மாநாடு பிப்- 24 முதல் 26 ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற உள்ளது .இந்த மாநாட்டை வெற்றி பெற செய்ய தொழிலாளர்களை ஒன்று திரட்டி பொது மாநாட்டில் பங்கேற்க்க செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

