நூறு நாள் வேலைத்திட்டத்திற்க்கு நிதி ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரி தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. பிரதாபன் தலைமையில் நடைபெற்றது. கிராமப்புற பெண் தொழிலாளர்களான இலளிகம் அலுமேலுஎத்துராஜ்,சூரம்மாள், பெரியண்னன்,இளவனசிவேலு,தனலட்சுமிராமசுந்தரம்,பால்சிலம்பு ராஜாமணிதீர்த்தான்,ஜி ராஜகோபால்,பெரியூர் இலட்சுமணன், அதகப்பாடிஜி.பச்சாகவுண்டர், பைசுஅள்ளி ஜி மாதையன், நார்த்தம்பட்டி என் பி ராஜி,தின்ன அள்ளி ஆர். மல்லையன், ஏங்கி, ஜி. சம்பத்,வி .செல்வம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்திற்குஒன்றிய அரசு 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்

