பாலக்கோட்டில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை மற்றும் பேரூராட்சி துறை இனைந்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர் யுயல்மூர்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர்
பாலக்கோடு பேருந்து நிலையம், எம்.ஜி.ரோடு, கடைவீதி, பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டிகடைகள், மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், உள்ள வளையல் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டெடுத்து பறிமுதல் செய்தனர்.

மேலும் பாலக்கோடு புறவழிச்சாலையில் காவாப்பட்டி பிரிவு ரோடு ,பெட்ரோல் பங்க் எதிரில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கூல்லீப், ஹான்ஸ், புகையிலை ஆகியவை சுமார் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் ஒரு கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட 2 கடைகளுக்கும் இயங்க 15 தினங்கள் இயங்க தடை விதித்து தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

