அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாம் தமிழர் கட்சி தற்போது தமிழகத்தில் அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையத்தால் 10/1/2025 அன்று அறிவிக்கப்பட்டது, கடந்த 2024ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் தனித்து நின்று 8.2 சதவீதம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் அங்கிகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது, இதற்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்திற்குட்பட்ட பாப்பிட்டிப்பட்டி, பொம்மிடி மற்றும் கடத்தூர் பகுதிகளில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதற்கான ஏற்பாடுகளை கட்சி சட்டமன்ற நிர்வாகிகள் திவாகர், சின்னசாமி மற்றும் பாதுகாப்பு பாசறை அருண் ஆகியோர் செய்திருந்தனர், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பா ஜெபசிங் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

