பென்னாகரத்தில்
200 ஆண்டுகள் பழமையான ஆலயத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் பழமை வாய்ந்த கொல்ல மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 18 கிராமங்களுக்கு சொந்தமானது.
1963 ல் இக்கோவில் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, இந்த கோவில் சிலை சுமார் ஓர் ஆண்டுகள் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு, பின்பு இந்த 18 கிராம மக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோயில் புதுப்பித்துக் கட்ட முடிவு எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது இந்த கோவில் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர் மோகன் தனது வீட்டிற்கு சென்று வர போதிய பாதை வசதி இல்லை கோவிலின் முன்புற பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மோகனின் வீட்டிற்கு சென்று வர பாதை ஏற்படுத்தித்தர அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்த இன்று பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியர் லட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், கோவில் ஆக்ரமிப்புகளை அகற்ற முற்பட்டனர்.

தகவல்அறிந்து சம்பவஇடத்திற்குவந்த18ஊர்முக்கியஸ்தர்கள்,அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வழக்கு தொடர்ந்த மோகனிடம் ஊர் மக்கள் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை சுமுக முடிவு எடுக்கப்படவில்லை என்றால் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்வதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு 15 நாட்கள் அவகாசம் தந்தனர்.
கோவிலை இடிக்க அதிகாரிகள் முற்பட்டதாக தகவல் பாரவியவதால், கோவில் முன்பு ஆண்கள் பெண்கள் என 18 ஊர் கிராம மக்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

