தமிழ்த் தாய் வாழ்த்தை அவமானப்படுத்தும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து தருமபுரியில் திமுக ஜன -7 ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம்.பெ.சுப்ரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோர் தலைமையில் நாளை ஜன-7 செவ்வாய்கிழமை , அன்று காலை 10.00 மணியளவில் தருமபுரி தொலைபேசி அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய, நகர ,பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ,இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் , கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் ,கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். என திமுக தருமபுரி கிழக்கு மேற்கு மாவட்டத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

