இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
பாலக்கோடு அருகே கூத்தாண்டஅள்ளியில் பழங்குடி இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள கூத்தாண்டஅள்ளியில் கிராமத்தில் பழங்குடி இருளர் இனமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் போதிய குடியிருப்பு வசதிகள் இல்லாமல் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தனர், இவர்கள் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் ,முன்னாள் அமைச்சருமான கே.பி அன்பழகன் அவர்களிடம் வைத்த கோரிக்கையின் பேரில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான பிரதம மந்திரி ஜென்மன் திட்ட நிதியில் இருந்து 24 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார் ,இதில் முதல் கட்டமாக 12 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கி தலா ரூ 5 லட்சத்து 7 ஆயிரம் வீதம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்.,கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிட பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில், புதூர் சுப்ரமணி,ராஜேந்திரன், சீனி, குணசேகரன், ரவி, அண்ணாமலை, அன்பழகன், சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

