சின்னாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 ஆம் (பசலி 1434) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 (பசலி 1434) ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு பகுதி 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜன- 3 இன்று முதல் மே- 22. வரை 140 நாட்களுக்கு பாசனத்திற்கு என மொத்தம் 395.33 மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500.00 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.
சின்னாறு நீர்த்தேக்கம் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய 13 கிராமங்கள் பாசன வசதி பயன்பெருகின்றன. பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, பாசனம் செய்து, அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர்.வெங்கடேசன், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் .பாஞ்சாலை கோபால், பஞ்சப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் நாராயணசாமி, உதவிப் பொறியாளர் (சின்னாறு அணைப்பிரிவு) சாம்ராஜ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

