மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா கண்காட்சி திறப்பு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2024) சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்ட சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ. பரந்தாமன், சி.வி.எம்.பி. எழிலரசன் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, உட்பட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் உடனிருந்தனர்.

