தருமபுரி மாவட்ட நேருயுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா
தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா செவ்வாய் கிழமை இன்று தருமபுரி அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல் காதர் வரவேற்றார்.
தருமபுரி அரசு சட்ட கல்லூரியின் முதல்வர் சிவதாஸ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாலக்கோடு அன்பழகன் ,பாப்பிரெட்பட்டி கோவிந்தசாமி , அரூர் சம்பத் குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன்,ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்புறையாற்றினர்.
நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம்பரத்குமார் நிகழ்ச்சியின் விளக்கவுரை வழங்கினார். நிகழ்வில் தருமபுரி இந்திய அஞ்சல் துறை, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் போன்ற அரசு துறையை சேர்ந்த திறன் மேம்பாட்டு ஸ்டால் அமைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிந்தியா செல்வி, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கௌரி, இந்திய அஞ்சல் துறை தருமபுரியின் தலையை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தருமபுரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு கவிதை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கைபேசி மூலம் புகைப்படம் எடுத்தல் போட்டி, கிராமிய குழு நடனம், அறிவியல் குழு கண்காட்சி, தனிநபர் அறிவியல் கண்காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு அழைப்பாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதியமான் டிவியின் இயக்குனர் கபில்தேவ் கக்கன், இளைஞர் நற்பணி சங்கம், பாரம்பரிய சிலம்பம் இளைஞர் நற்பணி சங்கம், தமிழர் தற்காப்புக் கலை இளைஞர் நற்பணி சங்கம் ஆகிய இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக அரசு சட்டக்கல்லூரியின் உதவி பேராசிரியர் ரேகா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் மற்றும் நேரு யுவ கேந்திராவின் அலுவலக பணியாளர்கள் வெண்ணிலா மற்றும் ரா. முனியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

