துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது , அதனையொட்டி காரிமங்கலம் அடிலம் கிராமத்தில் ஏழை எளிய பொதுமக்கள் , முதியோர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அடிலம் அன்பு அவர்களின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி , மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சார்பு அணி நிர்வாகிகள் சென்னகேசவன், நல்லதம்பி, குமார், கணேசன், அண்ணாமலை, சண்முகம் ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம், மாதையன் , ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர்,வார்டு கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்

