பொம்மனஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன், கோடாலம்மன், ஆலய மகாகும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடாலம்மன் ஆலயங்கள் பொம்மனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது, இக்கோயில் நெடுங்கால பழமையுடன், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ பெரியமாரியம்மன்,ஸ்ரீ சின்னமாரியம்மன், ஸ்ரீ மகாசக்திமாரியம்மன் மற்றும் கோடாலம்மன் ஆகிய ஐந்து தெய்வங்கள் அமைந்துள்ளது, இதன் ஜீனோத்தாரான அஷ்டபந்தன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதிநடைப்பெற்றது.இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார்.

இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடாலம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் கோடாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த விழாவில் சுமார் -5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், சிறப்பாக செய்திருந்தனர்.பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சுமார்,100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

