இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க கிளை சார்பில் அன்னல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இலளிகம் தியாகி ஆர். பி .நினைவு படிப்பகம் முன்பு அவரது உருவப் படத்துக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் எல். சி .கிருஷ்ணன் தலைமை வகித்தார் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அலமேலுஎத்துராஜ்,சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் நார்த்தம்பட்டி என் .பி.ராஜி,இலளிகம் காளியம்மாள், கோவிந்தம்மாள்,விஜயா ஆகியவர்களஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சங்க மாநில செயலாளரும் இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ .பிரதாபன் அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அம்பேத்கர் உருவாக்கிய இந்திய குடியரசு சட்டத்தினை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து பேசினார், இதில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்துக் கொண்ர் இறுதியில் ஆராம்புமாது நன்றி கூறினார்.

