காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் அனுசரிப்பு
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 68 வது நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.
மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 68 – வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் அறிவுறுத்தலின்படி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவின் சார்பாக மாவட்ட தலைவர் எம். சம்பத்குமார் ஆலோசனை படி தருமபுரி நகரம் 8 – வது வார்டில் மாமேதை அண்ணல் அம்பேத்கார் அவர்களின் சிலைக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் கே. யுவராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் டி. கலைச்செல்வன், மாவட்ட செயலாளர் எஸ். தமிழ்வாணன் மாவட்ட பொருலாளர் கே. மாதேஸ்வரன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தலைவர் முத்து ஜெயவேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,தீண்டாமையை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்

