டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 1,041 பயனாளிகளுக்கு 7.94 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் 1,041 பயனாளிகளுக்கு 7.94 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இன்று (06.12.2024) வழங்கினார்.

தருமபுரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 401 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடி மதிப்பீட்டில் இ-பட்டாகளும், 12 பயனாளிகளுக்கு ரூ.1.44 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.23.50 இலட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளும், 20 பயனாளிகளுக்கு ரூ.1.18 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.4.46 இலட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை, ஓய்வூதியங்களும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பீட்டில் தேசிய வோளண் வளர்ச்சி திட்ட மானியங்களும், தமிழ்நாடு தொழில் வணிக துறை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பீட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.24.60 இலட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், 1 பயனாளிக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் CM Arise திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும்,
பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.3.30 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் நிதி உதவித்தொகைகளும், 11 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளும், 16 நபர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளும்,
நகராட்சி துறையின் சார்பில் 204 பயனாளிகளுக்கு ரூ.13.86 இலட்சம் மதிப்பீட்டில் சேமநல நிதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும், பேரூராட்சி துறை சார்பில் 204 பயனாளிகளுக்கு ரூ.15.61 இலட்சம் மதிப்பீட்டில் நிதி உதவி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும், குடிமை பொருள் வழங்கல் துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.3.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.80 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,
மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.33.36 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன் உதவிகளும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தொழில் துவங்க கடன் உதவிகள் என மொத்தம் 1,041 பயனாளிகளுக்கு ரூ.7.94 கோடி (ரூ. 7,93,52,437/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இன்று வழங்கினார்.

இதனை தொடர்ந்து, ஜோதிமஹாலில் நடைபெற்ற சமபந்தி விருந்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், தருமபுரி நகர்மன்றத்தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் ஹமீத், பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், அனைத்து பேரூராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

