குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சி.எம் புதூரில் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஏழு கிராம குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையுடன், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது, இதன் நூதன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதிநடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசதீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு மற்றும் தீபாரதனை காட்டினார்.

இதனையடுத்து மகாகும்பாபிஷேக கலச தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது ,அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வெற்றி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சி.எம். புதூர்,பிக்கல்நாயக்கனஅள்ளி, சின்னதிம்மராயனஅள்ளி, பெரியகோடிக்காணஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, அமானிமல்லாபுரம் , நெல்லூர் ஆகிய ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர், ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

