மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
தமிழ்நாடு

தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

Social Vision
Last updated: 2024/12/04 at 3:17 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

தொப்பையாறு ஆற்றில், திறந்து விடபட்ட தண்ணீரால், தரைபாலம் அடித்து செல்லப்பட்ட இடத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் இடத்தில் தரைபாலம் அமைக்ககோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டதொப்பையாறுஆற்றங்கரையோரம் விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில், 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தொப்பையாறு அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், 2,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது, தொப்பையாறு ஆற்றில் ஆர்பரித்து கொண்டு, மேட்டூர் அணைக்கு செல்கிறது.

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

நேற்று முன்தினம் இரவு ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றின் குறுக்கே விநாயகபுரம் பகுதிக்கு அமைக்கபட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றது. அதேபோல், வெள்ளாரில் இருந்து கஸ்தூரி கோம்பைக்கு செல்லும் வழியில், தரை பாலத்தை தாண்டி அபாயகரமான நிலையில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை, பாப்பம்பட்டி, கோம்பை காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 2,000 -க்கும் மேற்பட்ட மக்கள் அத்தியாவசிய தேவைகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல, 8 கி.மீ., வரை சுற்றிசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொப்பையாறு ஆற்றின் குறுக்கே, விநாயகபுரம், வெள்ளார், பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி எம்எல்ஏ எஸ். பி. வெங்கட்டேஸ்வரன், திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ .சுப்பிரமணி ஆகியோர் நேரில் ஆய்வு

இது குறித்து, தகவல் அறிந்து வந்த பாமக ருமபுரி,சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் மற்றும் தருமபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தபின், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.

கயிறு கட்டி ஆற்றை கடந்த மக்கள்

கம்மம்பட்டி ஊராட்சியில், சேவியூர் கொட்டாய் பகுதியில், 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கம்மம்பட்டி பஞ்., வழியாக சாலை வசதி இல்லாததால், சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கருங்கல்பாளையம் வழியை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் செல்லும் வழியில், தொப்பையாறு செல்கிறது. இதில் 2,000 கனஅடி தண்ணீர் செல்வதால், அவற்றை கடக்க அபாயகரமான முறையில், ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பெரியவர்கள் மட்டும் கடந்து செல்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சேவியூர் கொட்டாய் பகுதியில் தரைபாலம் அமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

TAGGED: தொப்பையாறு தண்ணீரால் பாலம் உடைப்பு கயிறு கட்டி ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
Social Vision December 4, 2024 December 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி 

June 21, 2024
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

November 28, 2024
மீண்டும் மஞ்சபை
அரசு நல திட்டம்

நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

March 6, 2024
தமிழ்நாடுமாவட்டங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையம்: மால் ஹா? அல்லது பூங்கா வா? எதுவாக மாற போகிறது? 

February 5, 2024
பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

February 8, 2024
அரசியல்

தருமபுரி புரட்சிகர கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?