தருமபுரி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் (2.12.2024) ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி வத்தல்மலை அடிவாரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலத்தை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம், உங்கரானஅள்ளி ஊராட்சி, ஏமகுட்டியூரில் பெருக்கெடுத்து ஓடும் சனத்குமார நதியை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினி, மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

