ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு சார்பாக, தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கு விடுதி உரிமையாளர் சங்க துவக்க விழா ஒகேனக்கலில் நடைபெற்றது.

மாநில வணிகர் சங்க தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமை வகித்தார்இதில், வணிகர்களின் மத்திய மாநில பிரச்சினைகள், ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைகள், ஆன்லைன் வர்த்தகம் தடை, மே 5-ல் வணிகர் சங்க மாநில மாநாடு நடத்துவது குறித்தும், இன்றைய பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், சங்க வளர்ச்சி குறித்தும் மாநிலத் தலைவர் விக்ரமராஜா சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சதக் அப்துல்லா, தருமபுரி மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கிரிதர், பொருளாளர் ரவிச்சந்திரன், உள்ளிப்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளர் சங்கத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இதில், சங்க தலைவர் செந்தில்குமார் நிர்வாகிகள் சிவக்குமார், நாகராஜன், சங்கர், கார்த்திக், முருகேசன், ரமேஷ் வர்மா, கே.இ.சின்னசாமி, புலவர் முனியப்பன் வேடியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கர் நன்றியுரை நிகழ்த்தினர்.

