சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
சூரிய மின் உற்பத்தி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ. குமார் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எம். முத்து, எஸ். கிரைஸாமேரி, வே. விசுவநாதன், ஆர். மல்லிகா, தி. வ. தனுசன் , ஆர்.சின்னசாமி,இரவி,இடை கமிட்டி செயலாளர்கள் தருமபுரி நகரம் ஆர். ஜோதிபாசு, ஒன்றியம் கே. கோவிந்தசாமி, நல்லம்பள்ளி எஸ். எஸ். சின்னராஜ், பென்னாகரம் ஆ. ஜீவானந்தம்,இண்டூர் சேகர் பாப்பாரப்பட்டி சக்திவேல், ஏரியூர் தங்கராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. குப்புசாமி, கே. என். மல்லையன்,கே.பூபதி, ஏ.ஜெயா ,ராஜி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
அதானி குழுமத்தின் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் முறைகேடாக பல்லாயிரக்கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில், தொழிலதிபர் அதானியை கைது செய்திடவும்,இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

