சாலை வசதி இல்லாத அலக்கட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு
அலகட்டு மலைக் கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை , சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியாமல் பாதி வழியிலேயே சிறுமிஇறந்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சியில் அலகட்டு மலைக் கிராமம் அமைந்துள்ளது.மலை கிராமமான இந்த ஊரில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை அரசால் செய்து தரவில்லை.மலை சார்ந்த பகுதி என்பதால் கிராமத்தில் சாலை வசதி வேண்டி பலமுறை கிராம மக்கள் பல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ருத்ரப்பா மகள் கஸ்தூரி 13 வயது சிறுமி இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று தோட்டத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த உறவினர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சாலையில்லாததால் தூலிகட்டி அதில் சிறுமியை தூக்கி வந்தனர்.

மலையை கடந்து சிங்காடு தார் சாலை கொண்டுவரும் போது ஆபத்தான சூழ நிலையில் இருந்த சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.போதுமான சாலைவசதி இல்லாதது சிறுமியின்சாவுக்கு காரணம் எனபொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

