துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாளை தருமபுரி மாவட்டத்தில் திமுகவினர் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி , நான்கு ரோடு பகுதி, மின்சார வாரிய குடியிருப்பு பகுதி, கவுண்டனூர், ஆகிய பகுதியில் உள்ள துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திமுக நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றியகழகசெயலாளர்பி.கே.அன்பழகன் கலந்து கொண்டார்.முன்னதாக மாரண்டஅள்ளி நான்கு ரோடு மற்றும் கவுனூர்,சந்தை வீதி,பை-பாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் திமுக கொடியை ஏற்றி கேக் வெட்டி,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் இராஜகுமாரி மணிவண்ணன்,செங்கல் மணி பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன்,யதிந்தர்,கீதா,லட்சுமி,அபிராமி,சிவக்குமார், மாதையன்,ஆறுமுகம்,பன்னீர் செல்வம்,கிருஷ்ணகுமார்,ஓன்றிய கவுன்சிலர் ராஜா, திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

