கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பணிகளை புறக்கணித்து 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பணிகளை புறக்கணித்து இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது.
இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடனே வெளியிட வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் ரஞ்சித் குமார், அரூரில் வட்ட தலைவர் இளையராஜா, பாப்பிரெட்பட்டியில் வட்ட தலைவர் அருன்,காரிமங்கலத்தில் வட்ட தலைவர் ராஜ்குமார், பாலக்கோட்டில் வட்ட தலைவர் செந்தில், பென்னாகரத்தில் ராஜா நல்லம்பள்ளியில் மணி ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

