ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ரேஷன் முறையை பலப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26000/- நிர்ணயம் செய்யவேண்டும். நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாட்களை அதிகப்படுத்தி கூலியை உயர்த்தி வழங்கவேண்டும். விவசாயிகளின் விலை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைகளை உருவாக்க வேண்டும்.என வலியுறுத்தினர்.

மேலும் மின்சார மசோதா 2022 திரும்பப் பெற்று ஸ்மார்ட் மீட்டரை பொருத்தக்கூடாது.அரசுநிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்க கூடாது.அனைவருக்கும் இலவச கல்வி, வீடு, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி மற்றும் வாரிசு வரியை மீண்டும் அமலாக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு நல வாரியத்திலிருந்து நிதி பங்களிப்போடு இ.எஸ்.ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும். மூன்று குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். காண்ட்ராக்ட் முறையை ஒழித்து சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுலாக்க வேண்டும். உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சி. முருகன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன் மாவட்ட செயலாளர் பி. ஜீவா ,எல்பிஎப் மாவட்ட தலைவர் அன்புமணி மாவட்ட செயலாளர் சண்முக ராஜா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே. மணி, மாவட்ட துணைத் தலைவர்கள சுதர்சனம், முருகேசன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் மாதையன் ஏஐசிசிடியு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவராமன்,போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் ஜி. முருகன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்கள் சோ. அருச்சுனன், எம். குமார், கே. என். மல்லையன்,கே.கோவிந்தராஜ், சின்னசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். முத்து, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

