100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடியின பெண்கள் ஆட்சியரிடம் மனு.
100 சதவீத மானியத்தில் நாட்டு கறவை மாடுகள் வழங்க கோரி வத்தல்மலை பழங்குடி பெண்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி யிடம் மனு கொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு:
தருமபுரி மாவட்டம் கொண்டகர அள்ளி ஊராட்சிக்குட்பட்டது வத்தல்மலை இங்குபால்சிலம்பு,பெரியூர்,சின்னாங்காடு,கொட்டலாங்காடு,ஒன்றியக்காடு,மண்ணாங்குழி அகிய குக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடிமக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு விவசாய நிலம் இல்லை கூலி வேலை செய்கின்றனர். இங்குள்ள ஆண்கள் வேலைத் தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். இங்குள்ள பெண்கள் வாழ்வாதாரத்திற்காக நாட்டு கறவை மாடுகள் வழங்கினால் இதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

மேலும் அழிந்து வரும் நாட்டு மாடுகள் மேலும் உற்பத்தியாகும் எனவே வருமைகோட்டின் கீழ் வாழும் 72 பழங்குடி பெண்கள் 100 சதவீத மானியத்தில் நாட்டு கறவை மாடுகள் வாங்க பழங்குடி நலத்துறையின் கீழ் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அக்கிராம பெண்களுடன் தமிழ்மாநில விவசாய தொழிலாள சங்க மாநில செயலாளர் ஜெ. பிரதாபன்,மாநிலக்குழு உறுப்பினர் ஜி. மாதையன்,ஒன்றிய தலைவர் ஜி. ராஜகோபால்,ஒன்றிய செயலாளர்ஜி.பச்சாகவுண்டர், பால்சிலம்பு ஊர்தலைவர் துரைசாமி, மற்றும்அழகுதுரை,தங்கராஜ்,மாது,ரங்கன், ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் மனு கொடுத்தனர்

