மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 
குற்றம்தமிழ்நாடு

மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 

Social Vision
Last updated: 2024/11/18 at 2:41 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 45 மருத்துவமனைகள் மகப்பேறு சிகிச்சை (பிரசவம்) அளிக்கும் மருத்துவமனைகளான உள்ளன. மருத்துவமனைகளின் வசதிகளை பொறுத்து மூன்று வகைகளாக தரம் பிரித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
1. Level 1- மருத்துவமனை என்பது அடிப்படை வசதிகள் மற்றும் பிரசவ அறை உள்ள மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் High Risk தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது.
2. Level 2- பிரசவ அறை மற்றும் அறுவை அரங்கு உள்ள மருத்துவமனைகளாகும். இதில் இருதய பாதிப்பு, இரத்த அழுத்தம். வலிப்பு நோய், தீவிர நோய் தொற்று, உயர் சர்க்கரை அளவு, மயக்கநிலை, தீவிர நிமோனியா தொற்று, தீவிர டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, தீவிர சிகிச்சை பிரிவு (ICU) அனுமதிக்கும் தாய்மார்கள் மற்றும் பிற தீவிர தொற்று ஏற்படும் தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கக் கூடாது.
3. Level 3- பிரசவ அறை, அறுவை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) உள்ள மருத்துவமனையாகும். இதில் அனைத்து விதமான நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம்.
நமது மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் ஜீலை 2024 வரை மகப்பேறு மரணங்கள் எதுவும் நிகழவில்லை. ஆகஸ்ட் 2024-ம் மாதத்தில் 2, செப்டம்பர் 2024-ம் மாதத்தில் 2. அக்டோபர் 2024-ம் மாதத்தில் 2, நவம்பர் 2024-ம் மாதத்தில் 1 என மகப்பேறு மரணங்கள் நடந்துள்ளது. எனவே, மகப்பேறு மரணங்கள் நிகழாமல் தடுக்க மருத்துவமனைகளுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது
Low Risk -ல் இருந்து High Risk-க்கு மாறும் தாய்மார்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவசர ஊர்தியின் மூலம் அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்து அனுப்பப்பட்ட தாய்மார்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் PICME PORTAL-ல் Entry போட வேண்டும். பிறகு Whatsapp Group-ல் பதிவிட வேண்டும். மாதந்தோறும் 50 பிரசவத்திற்கு மேல் பார்க்கப்படும் மருத்துவனைகளில் Blood Storage Centre அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் 24 மணிநேரமும் இயங்கிவரும் மகப்பேறு மருத்துவமனைகளில் ஒரு மகப்பேறு பணிமருத்துவர் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டால் தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் (Tamil Nadu Clinical Establishment Act ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
சென்ற வாரம் தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு. அம்மருத்துவமனையின் தரம் Level 3 -ல் இருந்து Level 2 ஆக தரவிறக்கம் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் அம்மருத்துவமனையில் Complicated High Risk தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  உத்தரவின்பேரில் அறிவுறுத்தப்படுகிறது.
TAGGED: மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு
Social Vision November 18, 2024 November 18, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.5.16 லட்சம் காணிக்கை

February 22, 2025
குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

June 8, 2024
தமிழ்நாடு

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

May 23, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

July 27, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
தமிழ்நாடு

காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருச்சிலைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர் தூவி மரியாதை

October 2, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?