சர்வதேச போட்டியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மலேசியாவில் நடைபெறவுள்ள செவி மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களின் பயிற்சி மற்றும் பயணச் செலவுக்காக தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.2.20 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினோம்.
இச்சர்வதேச போட்டியில் நம் மாற்றுத்திறனாளி வீரர் – வீராங்கனையர் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும். என தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

