அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு சரிவர ஆசிரியர்கள் வராததால் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலர் இடத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரியின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளார். தலைமை ஆசிரியரை மாற்றம் செய்ததை கண்டித்து குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அனுமதி இன்றி சாலையில் அமர்ந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மூர்த்தி, கிருஷ்ணன், அருள்குமார், ரவி, மாரி, செல்வம் இவர்களது தலைமையில் மறியல் செய்ததாக போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

