பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்க்க கோரி மின்வாரிய ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நவ-15 அன்று தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்கவேண்டும்.புதிய காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து பணப்பயன்களை வழங்கவேண்டும்.ஒப்பந்த ஊழியர்களின் பணிகாலத்தை
ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதிய திருத்தம் செய்யவேண்டும்.கமுட்டேசன் காலத்தை 12ஆண்டுகளாககுறைக்கவேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
அரசின் உத்தரவாதத்துடன் கூடிய பென்சனை முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு சேர்க்க வேண்டும். ஒய்வு பெறுகின்ற அன்றேபணப்பயன்களைவழங்க வேண்டும்.புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜி. பி. விஜயன், மாவட்ட பொருளாளர் எம். சின்னசாமி துணைத் தலைவர்கள் சுப்பிரமணிபி. . சுப்பிரமணி, ஆர். ரகுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்
