தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகளை துவக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை துவக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி ஒன்றியம் இலக்கியம் பட்டி ஊராட்சி குள்ளனூர், பனந்தோப்பு ஒட்டியுள்ள4ஏரிகளைஆக்கிரமித்துள்ள ஆக்ரமிப்பாளர்களை அகற்றி தூர் வாரி ஏரி,நீர்நிலைகளைபாதுகாக்கவேண்டும்முதலமைச்சரால்அறிவித்துதுவங்கபடாமல் உள்ள வெண்ணாம்பட்டி இரயில்வே மேம்பாலம் உடனே துவங்கி முடிக்க வேண்டும். தருமபுரி ஒட்டியுள்ள சனத்குமார் நதியில் கழிவுநீர், சாயப்பட்டரை நீர் கலந்து மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வி. ஜெட்டிஅள்ளி, செம்மாண்டகுப்பம். நத்தம் ஆகிய பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சுகாதாரம் பாதுகாக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை-வெண்ணாம்பட்டி கோட்ரஸ் சாலை, பழுதடைந்து உள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.பச்சனம்பட்டி பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிழல்கூடம் அமைத்து தரவேண்டும்.பிடமனேரியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாருதல் மற்றும் தெருவிளக்கு அமைத்துதர வேண்டும்.நீண்ட காலம் புறம்போக்கில் குடியிருப்போருக்கு மனைபட்டாவும். அனுபவ நிலத்திற்கு நிலபட்டா வழங்க வேண்டும்.
வி. ஜெட்டிஅள்ளியில் பிற்பட்டோர் நலத்துறையால் நில ஆர்ஜிதம் செய்து தகுதியற்றவர்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து தகுதியுடையவர்களுக்கு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து,எம்.முத்து,எஸ்.கிரைஸாமேரி மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. பூபதி, கே. என். மல்லையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, எம். மீனாட்சி, தீ. மாரியப்பன், எம். பழனி, எம். பெருமாள் என். கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

