ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை நேரங்களில் அரசு பேருந்து இயக்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பென்னாகரம் வட்ட 15 -ஆவது மாநாடு பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ந டைபெற்றது.
வட்ட தலைவர் எம். திம்மராயன் தலைமை வகித்தார். வட்டதுணைத்தலைவர் எம்.அருள்மணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்ட இணை செயலாளர் சின்னசாமி வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளிநாதன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். வட்ட செயலாளர் கி. வேலவன் வேலை அறிக்கை வாசித்தார். வட்ட பொருளாளர் ஜே. சபரீஸ் வரவு செலவு கணக்கை சமர்பித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். முருகன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட அமைப்பாளர் சி. காவேரி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிர்வாகிகள் அம்பிகா, தமிழ்செல்வி தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட தலைவராக எம். திம்மராயன், வட்ட செயலாளராக வெற்றி செல்வன், பொருளாளராக டி, ராஜா, துணைத்தலைவர்களாக கே. அருன்ஏசுதாஸ், பி. அம்பிகா, இணைசெயலாளராக டி. சண்முகம், எம். ரகு, மகளிர்துணைக்குழுவாக ஆர். தமிழ் செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக சின்னசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பி அனைத்து அத்தியாவசிய மருந்துகளுடன் தரம் உயர்த்த வேண்டும். ஏரியூர் ஒன்றியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை மாலை அலுவலக நேரங்களில் சென்றுவர போதுமான அரசு பேருந்துகளை பென்னாகரத்திலிருந்து இயக்க வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள். எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

