பென்னாகரம் அருகே கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே
பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மருக்காரம்பட்டி, பவளந்தூர், ஜெல் மாரம்பட்டி, அட்ட பள்ளம், உப்பலாபுரம் ஆகிய கிராமங்கள் மலைசார்ந்த பகுதி ஆகும்.இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பிஅக்ரஹாரம்அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி சார்ந்த மக்களும் அன்றாட தேவைகளுக்கும் வேலைகளுக்கு செல்லவும் பேருந்து போக்குவரத்தை நம்பி உள்ளனர். தினமும் காலை 8. 15 மணிக்கு செல்லும் பேருந்து 9:30 மணிக்குத்தான்பி.அக்ராகரம் பள்ளியை சென்று அடைகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் வகுப்புக்கு செல்ல முடிவதில்லை கூறுகின்றனர்.மேலும் மாலை 6:30 மணிக்கு பி .அக்ராகரத்தில் இருந்து செல்லும் 26 சி பேருந்து 8 மணிக்கு மேல் இந்த பகுதிகளுக்கு சென்று சேர்கிறது.அங்கு சென்றாலும் பேருந்து இறங்கும் மாணவர்கள் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதி கேட்டு திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
