சிறுமியை கர்ப்பமாக்கியவாலிபர் மீது போக்சோசட்டத்தில் வழக்கு பதிவு
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் 17 வயது சிறுமி 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 6 மாதத்திற்க்கு முன்பு பென்னாகரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்க்கு சென்றவர் பென்னாகரம் அடுத்த குளாத்திரம் பட்டியை சேர்ந்த நேதாஜி (வயது. 25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுதெரிந்து பெற்றோர்சிறுமியைகண்டித்ததால்,கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி வாலிபரை திருமனம் செய்து கொண்டு அவரது வீட்டிலேயேவசித்துவந்தார்.இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதும், 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.
17 வயது சிறுமி கர்ப்பமானது குறித்து பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

