பெரும்பாலை சுடுகாட்டில் தெரு விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலையில் சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் இறந்தவர்களை பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் உள்ள சுடுகாட்டில் தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம் .இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக சுடுகாட்டில் உள்ள தெருவிளக்கு எரியாததால் மாலை மற்றும் இரவு நேரங்களில் இறுதி சடங்கு செய்யும் பொழுது வெளிச்சம் இல்லாததால்பெரிதும்சிரமப்படுகின்றனர்.

வெளிச்சத்திற்காக டார்ச் லைட் மற்றும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சுடுகாடு வழியாக தான் மலையூர் காடு, பொடரங்காடு ,கேஸ் குடோன் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய பொது வழித்தடம் ஆகும்.இந்த வழியாக செல்லும் கிராம மக்களும் பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என்பதே பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

