மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (9.11.2024) விருதுநகர், சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அக்காப்பகத்தில் தங்கியுள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடியபோது, மாணவியொருவர் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், ஆகியோர் பங்கேற்றனர்
