காணொலி கட்சி வாயிலாக பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டாரம், அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.64.08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டடங்கள், மொரப்பூர் வட்டாரம், முத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.78.24 மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்கள், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.502.22 இலட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டடங்கள், என மொத்தம் ரூ.644.54 இலட்சம் மதிப்பீட்டில் 11 வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அதகப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

