தண்ணீர் தொட்டியில் மூழ்கி இரண்டரை வயது சிறுவன் உயிர் இழப்பு
தருமபுரி மாவட்டம், அரூர் 7 – வது வார்டு, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் (45) மேஸ்திரி, இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை 3:30 மணிக்கு இளைய மகன் கனிஸ்வரன்(2.1/2) என்பவர் காணவில்லை என தேடி உள்ளனர். பின்னர் வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டி திறந்திருந்ததாகவும் அதில் இறங்கி பார்த்தபோது கனிஸ்வரன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

