தருமபுரி அதியமான் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்க பள்ளி மேலான்மைக்குழு வலியுறுத்தல்.
தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலான்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் தலைமை வகித்தார். பள்ளி மேலான்மைக்குழு குழு தலைவர் நூராணி , அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர் ரவிக்குமார் வட்டார வள மையை கல்வி அலுவலர் பரிதாபானு , பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கபீர் உள்ளிட்ட பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் ,போக்சோ சட்டம் குறித்துவிழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அதியமான் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு என தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்துவது எனவும் பள்ளிக்கு புதியதாக சுற்று சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
,

