மாமேதை லெனின் எழுதிய நூல்கள் கட்டுரைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
மாமேதை லெனின் தேர்வு நூல்கள்
நியூசெஞ்சுரி புத்தகநிறுவனம்
வெளியீடு திட்டம்குறித்தான
கலந்துரையாடல்கூட்டம் இலளிகம் தியாகி ஆர் பி நினைவு படிப்பகத்தில்
நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட நல்லம்பள்ளி வட்டம்
இலளிகம் தியாகி ஆர் பச்சாகவுண்டர்
நினைவு படிப்பகத்தில் புரட்சித் தலைவர் மாமேதை லெனின்
எழுதிய நூல்கள் கட்டுரைகள் அறிக்கைகள் ஆகியவற்றை தொகுத்து வெளியிட இருக்கிறது நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இது குறித்தான கலந்துரையாடல் கூட்டம்
இலளிகத்தில் தமிழ்நாடு கலைஇலக்கிய
பெருமன்ற நல்லம்பள்ளி வட்டகிளை செயலாளர் வெ .பை . மாதையன்
தலைமையில் நடைபெற்றது.
நிகழச்சிக்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி .மாதையன் முன்னிலை
வகித்தார். இதில் தியாகி ஆர் .பி.நினைவு படிப்பக நிர்வாகி,ஜெ பிரதாபன் லெனின் எழுதி நூல்கள்
இன்று படிக்க வேண்டிய
அவசியம் குறித்து விரிவான முறையில் பேசினார். மேலும் இன்றை கார்பரேட் முதலாளித்துவத்தின் அராஜக உற்பத்தி
கொள்ளை லாபம் அடிப்பது குறித்தும்
லெனின் உருவாக்கி புரட்சிகர -புதியவகை கட்சி – மற்றும் இயக்கவியல் பொருள் முதல்வாதம் குறித்து பேசினார்
இறுதியில் தியாகி ஆர் பி நினைவு படிப்பகநிர்வாகக்குழுஉறுப்பினர் அலமேலுஎத்துராஜ் நன்றி கூறினார்.
