ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து 31,000 கன அடியாக அதிகப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அக்-23.காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 31,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 28,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்த தண்ணீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இந்த தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும் குளிக்கவும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தடை நீடித்து வருகிறது.

