நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு.
நூறு நாள் வேலை கேட்டு இராயபுரம் பட்டியலின மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி யிடம் மனு கொடுத்தனர்
மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பட்டது. ஆர். கோபிநாதம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குபட்டது இராமாபுரம் காலனி இங்கு 200 க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பங்கள் உள்ள.
இவர்களில் பெரும்பகுதி விவசாய நிலம் இல்லை விவசாய கூலி மற்றும் நூறு நாள் வேலையை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஊராட்சியின் அனைத்து கிராம மக்களுக்கும் நூறு நாள் வேலை வழங்கும் நிலையில் இராமாபுரம் காலனி மக்களுக்கு மட்டும் வேலை வழங்கப்படுவதில்லை நடப்பு ஆண்டில் இதுவரை 25 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை வேலை கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் உங்கள் கிராம பகுதியில் ஓடை, ஏரி இல்லை என தெரிவிக்கின்றனர். இந்த கிராம பகுதியில் ஓடை ஏரி கால்வாய்கள் உள்ளது. இந்த ஓடைகளை ஒரு சில நபர்கள்ஆக்கிரமித்துள்ள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
