மகாத்மா காந்தி பிறந்தநாளில் நூறு வேலை வேலைதிட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அக்டோபர் -02 மகாத்மா காந்தி பிறந்த நாளில் அண்ணல் காந்தியடிகள் பெயரை தாங்கி இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட விழிப்புணர்வு கருத்துரை கூட்டம் நல்லம்பள்ளி இராம சூரியா திருமணமண்டபத்தில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஜி. மாதையன் தலைமை வகித்தார். இதில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளரும் இலளிகம் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன் சட்ட விழிப்புணர்வு கருத்துகளை விரிவான முறையில் எடுத்துரைத்தார்,
இதன் மீது வேலை அட்டை பெற்ற கிராமப்புற தொழிலாளர்கள் எங்களுக்கு வேலை கிடைப்பதில்லை இந்த சட்டத்தினை முழுமையாக அமுலாக்கதினால் 100 நாட்கள் எந்த ஆண்டும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்இதில் ஏஐடியுசி யின் மாவட்ட பொதுச் செயலாளர் கே மணி , ஒன்றியசெயலாளர் ஜி.பச்சாகவுண்டர், மாநிலக்குழு உறுப்பினர் அலமேலுஎத்துராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் வெ .பை. மாதையன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் சாக்கன், கோவிந்தராஜ், இலட்சுமண்,செல்வம்,காவேரி,ஜெயவேல்,
அர்சுணன்,காளியம்மாள்,கோவிந்தம்மாள்,வளர்மதி, மூக்கன், மாது, நடராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் கீழ்க்கண்ட கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
தருமபுரி மாவட்டத்தில் வேலை அட்டை பெற்ற 2 லட்சத்து 72 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதனை இவ்வாண்டு (2024-2025) உத்தரவாதப்படுத்தி வேலை வழங்க வேண்டும்,தருமபுரி மாவட்டதில் திறனற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் கட்டுமான பணிகளுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க கூடாது.
தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஏரி குளம் குட்டைகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற நூறுநாள் திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற கிராமப்புற தொழிலாளர் களுக்கு வேலை வழங்கி தூர் வார வேண்டும்,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

