தருமபுரி புத்தகத்திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை மதுராபாய் திருமண மஹாலில் வருகின்ற 04.10.2024 முதல் 14.10.2024 வரை நடைபெற உள்ளது இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி இன்று (01.10.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
