பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்
புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில் கோயிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோ.மாதப்பன் அவர்கள் கலந்து கொண்டார்.

குறிப்பாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோவிலில், சுமார் 10 லட்சம் மதிப்பிலான வண்ண வண்ண மலர்களால் சாமிக்கு அலங்காரம் சிறப்பாக செய்யபட்டு வழிபாடுகள் நடைபெற்றது.இந்த வழிபாடுகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட நெடும் வரிசையில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே இக்கோவிலில் சிறப்பு பூஜை, மற்றும் பஜனை நடைபெற்றது.புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதமாகவும், புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் எனவும்,அதன்காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வழிபடுவது வழக்கமாகும் என்று இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

